Friday, 21 February 2014

                               பழைய m80


     அது ஒரு மழைக்காலம் விண்ணின் விழுதுகள் மண்ணை 
      தாக்கி கொண்டிருக்கும் ......மழைக்காலம் 
     வேண்டாம் என்று மண் சொல்ல போதும் என்று 
     மரங்கள் அலற .....மண் மீது தான் கொண்ட காதலை 
     மழைத்துளியாய் அனுப்பி கொண்டிருந்தது வானம் 
     பள்ளி முடிந்தது உன் தந்தையுடன் வந்துகொண்டிருக்கிறாய் 
     அந்த பழைய m80 .............உன்னை தொடர்ந்து வந்து .............
      கொண்டிருக்கிறேன் என் சைக்கிளில் .......உன் மீது பட்ட 
      காற்று என் மீது பட குளிரிலும் வெப்பமாகிறது 
       என் உடல் ....எவ்வளவு வேகமாய் போனாலும் 
       என் சைக்கிளை முந்த முடியவில்லை ....
       நீ செல்லும் அந்த பழைய m80..............ஆல் 
       ஆம் ..........
      அதற்கும் தெரிந்து இருக்கிறது உயிர் பின்னே வர 
      உடல் மட்டும்  எப்படி முன் செல்வதென்று .


                                                        kalகார்த்திக் .......

No comments:

Post a Comment