Friday, 21 February 2014

                            ஹைக்கூ ....


எங்கே காட்டு பார்க்கலாம் 
என் எச்சில் படாத உன் 
முகத்தின் பாகத்தை ........

உன் கனவில் பேய்கள் 
வருவதாய் சொன்னாய் 
நான் நம்பவில்லை ...
தேவதைகள் கனவில் 
பேய்கள் வருவதில்லை .......

நீ தொலைந்து போகும் 
நேரம் எதுவென கேட்கிறாய் 
நீ உடன் இருக்கும் நொடி 
என்கிறேன் ............
அப்படினா இப்ப என 
கன்ன குழி விழ சிரிக்கிறாய் .....

கவிதை எழுத மழை இயற்கை 
குழந்தை என எவ்வளவோ 
இருக்க ஏன் என்னை பற்றி 
மட்டும் எழுதுகிறாய் என்கிறாய் 

பாவம் உனக்கு தெரியவில்லை 
இவை அனைத்தும் நீ என .....

                                                           kalகார்த்திக்  .....


No comments:

Post a Comment